நுண்கதிர் துறை தினம் கொண்டாட்டம்

நுண்கதிர் துறை தினம் கொண்டாட்டம்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்ட காச நோய் மையத்தில் நேற்று நுண்கதிர் துறை தினம் கொண்டாடப்பட்டது.

நுண்கதிர் துறையின் தந்தை டபிள்யு.சி.ராண்ட்ஜன், எக்ஸ்ரேவை கண்டுபிடித்த நாளை சிறப்பிக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட காச நோய் மையத்தில் நுண்கதிர் துறை தினம் கொண்டாடப்பட்டது.

இதில் காசநோய் மைய துணை இயக்குநர் டி.மாதவி தலைமை வகித்தார்.

நுண்கதிர் வீச்சாளர் பி.செல்வம் முன்னிலை வகித்தார். தலைமை நுண்கதிர் நுட்புநர் ஜெ.டைட்டஸ் ராஜாசிங் நன்றி கூறினார்.

இதில், மாவட்ட காசநோய் மைய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in