கரும்பு அபிவிருத்தி அலுவலரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்

கரும்பு அபிவிருத்தி அலுவலரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான அரவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 2-வது நாளாக தொடர் முழுக்க போராட்டத்தில் தொழிலாளர்கள் நேற்றும் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த கேத் தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று 2-வது நாளாக திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக தொடர் முழக்கப்போராட்டம் நடை பெற்றது. இதில், 200-க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in