Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM

வேலூர் லட்சுமி கார்டன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக் கான சாப்ட் டென்னிஸில் வேலூர் லட்சுமி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கே.எம்.ராக, தனிநபர் பெண்கள் பிரிவிலும் ஏ.ஆர்.தர்ஷன் தனிநபர் ஆண்கள் பிரிவி லும் தங்கப்பதக்கம் பெற்ற னர். அதேபால், குழு போட்டியில் பெண்கள் பிரிவில் கே.எம்.ராக வெள்ளிப் பதக்கமும், ஆண்கள் பிரிவில் ஏ.ஆர்.தர்ஷன் வெண்கலப் பதக் கமும் பெற்றுள்ளனர். தேசிய அளவிலான போட்டியில் பதக் கங்களை பெற்றதுடன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.8.5 லட்சத்துக்கான காசோலையை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் இருவரும் பெற்றுள்ளனர். ஊக்கத் தொகை பெற்றுள்ள மாணவர்களையும் பயிற்றுநர் மணிமுருகனையும் பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் பர்வீன் அஸ்லாம், துணை முதல்வர் விஜய் விவியன் ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x