குப்பைக் கிடங்கான கண்மாய் காளையார்கோவிலில் மக்கள் சாலை மறியல்

காளையார்கோவிலில் குப்பைக் கிடங்கை மாற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
காளையார்கோவிலில் குப்பைக் கிடங்கை மாற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் கண்மாயில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து கிராம மக்கள் மறியல் செய்தனர்.

காளையார்கோவில் ஒலுகுளம் கண்மாய் மூலம் 100 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காளையார்கோவிலில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் அந்தக் கண்மாயில் கொட்டத் தொடங்கியது. தற்போது அந்தக் குப்பை மலைபோல் தேங்கியுள்ளது. இதனால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இதையடுத்து கண்மாயில் குப்பைக் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து காளையார் கோவில் தெற்குத் தெரு பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி நிர்வாகத்தினர் சமரசத்தை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in