Published : 07 Nov 2020 03:15 AM
Last Updated : 07 Nov 2020 03:15 AM

வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் ஆயுதப்படை காவலர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

தி.மலை மாவட்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் ஆயுதப்படை காவலர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

தி.மலை மாவட்டம் வேட்டவலம் நகரில் வசித்தவர் குணசேகரன்(28). தி.மலை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த மாதம் 23-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுள்ளார். வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி அருகே சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து வேட்டவலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் தர்மாபுரத்தில் வசித்தவர் விவசாயி முருகன்(59). இவர், தனது வீட்டின் அருகே உள்ள தேநீர்கடைக்கு சென்றுவிட்டு கடந்த 2-ம் தேதி வீட்டுக்கு நடந்து சென்றார். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள மாங்கால் கூட்டுச்சாலையை கடந்தபோது, விவசாயி மீது அவ் வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகன், சென்னை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தூசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x