குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
Updated on
1 min read

பாலியல் வழக்கில் தொடர்பு டைய இளைஞர்கள் இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே சாமியார்புதூரைச் சேர்ந்தவர்கள் நவீன்(24), சங்கர்(20). இருவரும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டு பழநி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா, ஆட்சியர் மு.விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in