பிளவக்கல் பெரியாறு அணை பாசனத்துக்காக திறப்பு

பிளவக்கல் பெரியாறு அணை பாசனத்துக்காக திறப்பு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியிலுள்ளபிளவக்கல் பொியாறு, கோவிலாறு, ராஜ பாளையம் சாஸ்தா கோவில் ஆகிய அணைகளிலிருந்து முதல்போக பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து முதல்போக பாசனத்துக்கு நவ.5 முதல் பிப்.28 வரையிலும், சாஸ்தாகோவில் அணையிலிருந்து நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் நீர்த்தேவை அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்," என்றார். வில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in