வெளிவயல் கிராம கண்மாயில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்

வெளிவயல் கிராம கண்மாயில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உள்ள 365 ஏக்கரிலான வெளிவயல் கண்மாயில் 83 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதனால், குறிப்பிட்ட பகுதி விவசாயிகளுக்கு இந்த கண்மாயில் இருந்து தண்ணீர் செல்லாதால் சாகுபடி பாதிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், 2016-ல் 80 ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 3 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதை அகற்றுவதற்கு எதிராக விவசாயி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீஸார் பாதுகாப்புடன் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் சிவக்குமார், நீர்வள ஆதாரத் துறை இளநிலை பொறியாளர்கள் ராமமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலையில் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு அvகற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in