

தேனி அருகே பூமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக் குமார் (40). அரசு போக்குவரத் துக் கழக நடத்துநர். முன்னாள் ராணுவ வீரரான இவரது தந்தை பெருமாளுடன் தேனியில் உள்ள ராணுவ கேண்டீனுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
இருவரும் ஊர் திரும்பிய போது நாகலாபுரம் அருகே சாலையோரத்தில் பட்டுப்போன மரம் அவர்கள்மீது விழுந்தது. இதில் சிவக்குமார் உயிரிழந்தார். காயமடைந்த பெருமாள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பழனிச்செட்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.