திருப்பூருக்கு 6-ம் தேதி முதல்வர் வருகை ஆட்சியர் அலுவலக தூய்மைப் பணி தீவிரம்

திருப்பூருக்கு 6-ம் தேதி முதல்வர் வருகை  ஆட்சியர் அலுவலக தூய்மைப் பணி தீவிரம்
Updated on
1 min read

தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 6-ம் தேதி திருப்பூர் வருவதையொட்டி, ஆட்சியர் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு புதிய பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். கரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்கிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 6-ம் தேதி மாலை 4 மணிக்குநடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.

இதையொட்டி, ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்திலுள்ள அறைகளின் முன்பகுதி, கூட்டரங்கத்தின் வெளிப் பகுதிகளில் சுண்ணாம்பு அடித்து தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முதல்வர் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு, கரோனா பரிசோதனை நடத்துவது தொடர்பான பணிகளில் மருத்துவத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

எம்.பி.-க்கு தகவல் இல்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in