குடிநீர் விநியோகம் கோரி முற்றுகை

குடிநீர் விநியோகம் கோரி முற்றுகை
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் சக்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு 2-ம் குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குடிநீர் குழாய் உடைந்து 3 மாதங்களாகியும் சீரமைக்காததால், குடிநீர் விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள், அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வார்டு செயலாளர் சங்கர் தலைமையில், முதலாம் மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு, தங்களது கோரிக்கையை உதவி ஆணையர் வாசுகுமாரைசந்தித்து மனுவாக அளித்தனர்.சில தினங்களில் பிரச்சினைக்குதீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், முற்றுகை கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in