அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி முத்திரை தயாரித்த 3 பேர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி முத்திரை தயாரித்த 3 பேர் கைது
Updated on
1 min read

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட நாச்சியார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணி (48). இவரும், இருவருடைய மனைவி லட்சுமி (40) மற்றும் ஆட்டோ டிரைவர் ஹரிதாஸ் (30) என்பவரும் கூட்டு சேர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் முத்திரையை உருவாக்கி, மோசடியாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விருத்தாசலம் நாச்சியார் பேட்டை பகுதியில் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலமையிலான தனிப்படை போலீஸார் ஆய்வு மேற்கொண்டு மணி, லட்சுமி, ஆட்டோ டிரைவர் ஹரிதாஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய போலி அரசு முத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in