ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிறப்புச் சிகிச்சையைத் தொடங்கக் கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து சிஐடியூ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து சிஐடியூ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிறப்புச் சிகிச்சையைத் தொடங்கக்கோரி, சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சரியான நேரத்துக்கு மருத்துவர்கள் வருவதில்லை, தகுந்த சிகிச்சை அளிப்பதில்லை, கரோனா வைரஸை காரணமாக வைத்து இன்னும் புறநோயாளிகள் சிறப்புச் சிகிச்சையைத் தொடங்கவில்லை என்பன உள்ளிட்ட புகார்களை முன்வைத்து, சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் மருத்துவமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்துக்கு சிஐடியூ சங்க மாவட்டத் தலைவர் எம். அய்யாத்துரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, பொருளாளர் ஆர்.முத்துவிஜயன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in