காவலரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் சிவகாசி நகராட்சி ஊழியர் கைது

கார்த்திகேயன்
கார்த்திகேயன்
Updated on
1 min read

காவலரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சிவகாசி நகராட்சி வருவாய் உதவியாளர் ஒருவர் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சிவகாசியைச் சேர்ந்தவர் ஜாபர்சாதிக். திருத்தங்கல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறார். புது வீடு கட்டியுள்ளார். அதற்குத் தீர்வை ரசீது கோரி சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ரசீது வழங்குவதற்கு நகராட்சி வருவாய் உதவியாளர் கார்த்திகேயன்(43) பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காவலர் ஜாபர்சாதிக் இது குறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் தெரிவித்தார். இந்நிலையில், காவலர் ஜாபர்சாதிக்கிடம் கார்த்திகேயன் நேற்று பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். அப்போது அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கருப்பையா தலைமையிலான போலீஸார் கார்த்திகேயனை கைது செய்தனர்.

மேலும் அவர் லஞ்சமாகப் பெற்ற ரூ.10 ஆயிரத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in