Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலையை சீரமைக்கக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி, ஊத்தங்கரையில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பாமக சார்பில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவானந்தம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள, கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரையிலான சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஊத்தங்கரை வழியாகச் செல்லும், அரூர் - திருப்பத்தூர் சாலையும் சேதமாகி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியுடன் சென்று வர வேண்டி உள்ளது. எனவே, இச்சாலைப் பணியையும் விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் கவியரசு, ராஜூமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், சாலைகளை சீரமைக்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x