குளங்களை நிரப்பி குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மோளரபட்டி ஊராட்சி பொதுமக்கள் வேண்டுகோள்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்த மோளரபட்டி ஊராட்சித் தலைவர் ர.குமரவேல் தலைமையிலான விவசாயிகள். படம்: இரா.கார்த்திகேயன்
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்த மோளரபட்டி ஊராட்சித் தலைவர் ர.குமரவேல் தலைமையிலான விவசாயிகள். படம்: இரா.கார்த்திகேயன்
Updated on
1 min read

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பொதுமக்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மோளரபட்டி ஊராட்சித் தலைவர் ர.குமரவேல் தலைமையிலான கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தபின்பு கூறியதாவது: எங்கள் ஊராட்சியில் மோளரபட்டி, கள்ளிவலசு, சேனாபதிக்கவுண்டன்புதூர் ஆகிய மூன்று ஊர்களிலும், கிணறுகள் அனைத்தும் ஓராண்டாக வறண்டு காணப்படுகின்றன. மழை இல்லாததால் குளங்களும் வற்றிவிட்டன. ஊராட்சிக்கு அருகே அமராவதி கடைமடை கால்வாயில் இருந்து குருசாமி கோயில் ஓடை வரை இரண்டு கிலோ மீட்டர் கால்வாய் அமைத்து, உப்பாறு அணை வரை உள்ள நான்கு குளங்களை நிரப்பி குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்தித்தர வேண்டும்.

உப்பாறு அணை இருந்தும், எங்களுக்கு ஓர் ஏக்கர் நிலம்கூட பாசன வசதி பெறமுடிவதில்லை. அமராவதி அணையில் நீர் நிரம்பி ஆற்றில் உபரியாக செல்லும் காலங்களில், அமராவதி பாசனக் கால்வாய் கடைமடை கால்வாய்கள் வழியாக எங்கள் கிராமத்தில் உள்ள நான்கு சிறிய குளங்களை ஆண்டுக்கு இருமுறை நிரப்பினால்கூட, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும், என்றனர்.

பட்டா வழங்க கோரிக்கை

சுகாதாரமில்லாத வாழ்க்கை

எங்கள் பகுதியில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால், சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் சமுதாய நலக்கூடம் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

சுகாதாரமற்ற முறையில் வாழ்ந்து வரும் எங்களுடைய அவலத்தை போக்க வேண்டும், என குறிப்பிட்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in