Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

செங்கல்பட்டு மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் பதவி ஏற்பு

செங்கை மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலர் குழு நிர்வாகிகள் காஞ்சியில் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அறங்காவலர்குழு தலைவராக காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியமுன்னாள் தலைவர் பொன்னுசாமியும் குழு உறுப்பினர்களாக கணேஷ்குமார், மேகலாரகுநாதன், குப்பன், எஸ்வந்தராவும் பொறுப்பேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலர்கள் காஞ்சி சோமசுந்தரம், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலர் சம்பத்குமார், அதிமுக நிர்வாகிகள் தேவராஜ், ஆலப்பாக்கம் சல்குருஉட்பட பலர் கலந்துகொண்டுவாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x