

கடந்த 2010-ம் ஆண்டு, அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி ,இசை, தையல் போன்ற பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில்,தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.