பெயிண்டர் கொலையில் 7 பேர் கைது

பெயிண்டர் கொலையில் 7 பேர் கைது
Updated on
1 min read

திண்டுக்கல் பெயிண்டர் கொலையில் ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த கர்ணன் மகன் செல்வராஜ் (33), பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு வீடு புகுந்த 10 பேர் கும்பல், ஆயுதங்களால் செல்வராஜை வெட்டியது. இதைத் தடுக்க வந்த அவரது தாய் பாப்பாத்திக்கும்(65) தலையில் வெட்டு விழுந்தது. இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து நகர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திண்டுக்கல்லைச் சேர்ந்த சைமன்ராஜ்(24), மதன்(25), பிரசாந்த் (28), மணிகண்டன்(25), சவரி நாதன்(23), அய்யனார்(24), ரசுபுதீன்(22) ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in