மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
Updated on
1 min read

வெங்காய விலை உயர்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் ஒப்பாரிப் போராட்டத்தை நடத்தினர். அந்த அமைப்பின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஜானகி தலைமை வகித்தார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். வெங்காய விலை கிலோ ரூ.100-க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in