திண்டுக்கல்லில் தொழிலாளி கொலை

திண்டுக்கல்லில் தொழிலாளி கொலை
Updated on
1 min read

திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த கர்ணன் மகன் செல்வ ராஜ்(33). பெயின்டர்.

நேற்று இரவு வீட்டில் இருந்தபோது, ஆயுதங்களுடன் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் செல்வராஜை வெட்டியது. அவர்களை தடுக்க முயன்ற செல்வராஜின் தாயார் பாப்பாத்திக்கும்(65) தலையில் வெட்டு விழுந்தது. செல்வராஜ் உயிரிழந்தார். பாப்பாத்தி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த மே மாதம் நடந்த கொலை ஒன்றில் செல்வராஜுக்கு தொடர்பு உள்ளதாகக் கருதி, பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடத்திருக்கலாமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in