தற்கொலை செய்த இளைஞரின் உடலை வாங்க மறுப்பு சிவகங்கை மருத்துவமனை முற்றுகை

தற்கொலை செய்த இளைஞரின் உடலை வாங்க மறுப்பு  சிவகங்கை மருத்துவமனை முற்றுகை
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

மானாமதுரை அருகே கீழப்பிடாவூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (24). இவர் கடந்த அக்.27-ம் தேதி விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், காதல் பிரச்சினையில் சிலர் மிரட்டியதால் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்குக் காரணமா னவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் இளைஞரின் உடலை வாங்க மறுத்து முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குணசேகரன் தலைமையில் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

மானாமதுரை டி.எஸ்‌.பி சுந்தரமாணிக்கம், இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலைக் கைவிட்டு, உடலை வாங்கிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in