மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பீமனூர்-சுருளிஅள்ளி சாலையில் காவேரிப்பட்டணம் போலீஸார் ரோந்து மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சென்ற டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், லாரியில் 1 யூனிட் மணல் இருப்பதும், அந்த மணல் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. லாரியை பறிமுதல்செய்த போலீஸார், லாரியின் ஓட்டுநரான தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பூசாரிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த வேல்மணி (32) மற்றும் லாரியின் உரிமையாளரான தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம்(49) ஆகியோரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in