எலத்தகிரியில் குடிநீர் திட்ட பணிகள் தொடக்கம்

எலத்தகிரி கிராமத்தில் புதிய குடிநீர் திட்ட பணிகளை, கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் தொடங்கி வைத்தார்.
எலத்தகிரி கிராமத்தில் புதிய குடிநீர் திட்ட பணிகளை, கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலேப் பள்ளி ஊராட்சியில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் மதிப்பில், பரப்பள்ளி எலத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு லட்சம்லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் பொதுமக்களுக்குகுடிநீர் வழங்கும் திட்டத்தை எம்பிசெல்லகுமார் தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தலைவர் வழக்கறிஞர் அசோகன், மாநில பேச்சாளர் நாஞ்சில் துரைராஜ், மாவட்ட துணைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயசீலன், நகர தலைவர் வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in