Published : 01 Nov 2020 03:14 AM
Last Updated : 01 Nov 2020 03:14 AM

வெலக்கல்நத்தம் செட்டேரி அணையில் திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார் ஆய்வு

தமிழக-ஆந்திர எல்லையான செட்டேரி அணைப் பகுதியில் எஸ்பி விஜயகுமார் நேற்று ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகேயுள்ள வெலக்கல்நத்தத்தில் செட்டேரி அணை உள்ளது. தமிழக-ஆந்திர எல்லையாக இருக்கும் இந்தப் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. காவல் துறை சோதனைச்சாவடி எதுவும் இல்லாத நிலையில் அந்தப் பகுதியில் காவல் துறையினரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப் பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய குமார் நேற்று செட்டேரி அணைப் பகுதியில் ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு பணிகளை பலப்படுத்துவது குறித்த உத்தரவை அவர் விரைவில் வழங்குவார் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x