டிராக்டர் வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி

டிராக்டர் வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி
Updated on
1 min read

விழுப்புரம் அருகே தெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் பிரபு (28). இவர் சென்னையில் டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வந்தார். அப்போது சென்னை, முகப்பேர், சத்யா நகரைச் சேர்ந்த நிஷாந்த் (31), அவரது மனைவி காயத்ரி (28) ஆகியோர் நட்பானார்கள்.

அவர்கள் பிரபுவிடம், கூலிக்கு வேலை செய்ய வேண்டாம்; டிராக்டர் வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். அதன்படி 2 தவணைகளாக ரூ 6 லட்சத்தை பிரபு கொடுத்துள்ளார். டிராக்டர் வாங்கித் தராமல் இழுத்தடித்ததால் பணம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் பிரபு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் நேற்று நிஷாந்தை கைது செய்தனர். காயத்ரியை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in