தாய் தற்கொலை முயற்சி குழந்தை உயிரிழப்பு

தாய் தற்கொலை முயற்சி குழந்தை உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த வர் கட்டிட தொழிலாளி சதீஷ் (37). இவரது மனைவி சத்யா (27). இவர்களுக்கு தக்சனா (6), ஒன்றரை வயதில் அனன்யா என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

நேற்று வீட்டில் சத்யா, சாணி பவுடரை கலக்கி குழந்தை களுக்கு கொடுத்து விட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அனன்யா இறந்துவிட, சத்யா மற்றும் தக்சனா மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in