சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
Updated on
1 min read

திண்டிவனம் அருகே பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி, முட்ராம்பட்டு கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது 2 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் உறவினர் வீட்டில் தங்கி பயின்று வந்தனர். கரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடம் திறக்கவில்லை. இதனால் 5 குழந்தைகளும் செங்கல் சூளையில் தங்கள் பெற்றோருடன் தங்கியுள்ளனர். இவர்களின் 12 வயது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. செங்கல் சூளையில் பணிபுரியும் பிரகாஷ்(35) என்பவர் அந்தச் சிறுமியை கடந்த 26-ம்தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். திரும்பி வரும் வழியில் கரும்புத் தோட்டத்தில் சிறுமியை பிரகாஷ் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணியிடம் நடந்ததை தெரிவித்து ஆலோசனை கேட்டனர். அவரின் ஆலோசனை யின் பேரில் கண்டமங்கலம் போலீஸில் புகார் அளித்தனர்.ஆனால்போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த 27-ம் தேதி விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தனர். எஸ்பி உத்தரவின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in