வியாபாரியை மிரட்டியவர் குண்டர் சட்டத்தில் கைது

வியாபாரியை மிரட்டியவர் குண்டர் சட்டத்தில் கைது
Updated on
1 min read

கடலூர் அருகே நல்லாத்தூரைச் சேர்ந்தவர் தனசேகரன் (37). இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரை கடந்த மாதம், புதுச்சேரி கரிக்கலம்பாக்கத்தைச் சேர்ந்த மதன் (26) உள்ளிட்ட சிலர் மிரட்டி பணம் பறித்துள்ளனர். தூக்கணாம்பாக்கம் காவல் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் போலீஸார் இது தொடர்பாக மதன் மற்றும் வில்லியனூர் வி.மணவெளியைச் சேர்ந்த ஜாக் என்ற ஜெகன் (32) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் எஸ்பி அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி,குண்டர் சட்டத்தில் ஜாக் என்ற ஜெகனை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in