Published : 17 Dec 2021 03:07 AM
Last Updated : 17 Dec 2021 03:07 AM

தனியார் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை :

கோவை: கோவை திருமலையம்பாளையம் பகுதியில் தனியார் ஸ்டீல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை நெய்வேலியைச் சேர்ந்த ஒரு குழுமத்திடமிருந்து வாங்கியுள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்த உரிமையாளர் ஒருவர், அங்கு கோழித்தீவனம் உற்பத்தி மேற்கொள்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கோவை வருமானவரித் துறை அதிகாரிகள் இந்நிறுவனத்தில் நேற்று காலை 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். 6 பேர் கொண்ட அதிகாரிகள் உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x