சேலத்தில் வங்கதேசப் பெண் கொலை வழக்கு இன்டர்போல் போலீஸின் உதவியை பெற நடவடிக்கை :

சேலத்தில் வங்கதேசப் பெண் கொலை வழக்கு இன்டர்போல் போலீஸின் உதவியை பெற நடவடிக்கை  :
Updated on
1 min read

சேலத்தில் பெண் அழகுக்கலை நிபுணர் கொலையான வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க இன்டர்போல் போலீஸாரின் (சர்வதேச போலீஸார்) உதவியைப் பெற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

வங்கதேசத்தைச் சேர்ந்த தேஜ்மண்டல் (29) என்பவர் சேலம் வின்சென்ட் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தேஜ்மண்டலின் அழகு நிலையத்தில் பணிபுரிந்த லிப்லு, அவரது காதலி ரிஷி ஆகியோர் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், இருவரும் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, தலைமறைவான இருவரையும் பிடிக்க இன்டர்போல் போலீஸாரின் உதவியை பெற முடிவு செய்துள்ளனர்.

இதனிடையில், வங்கதேசத்தில் உள்ள தேஜ்மண்டலின் கணவர் முகமதுராக்கியை போலீஸார் தொடர்பு கொண்டபோது தேஜ்மண்டலின் உடலை தனது சொந்த ஊருக்கு வாங்கிச் செல்ல வசதியில்லை என தெரிவித்தார். இதனால், கடந்த 63 நாட்களாக சேலம் அரசு மருத்துவமனைபிரேதப் பரிசோதனை கூடத்தில் தேஜ்மண்டல் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தனது மனைவியின் உடலை வாங்கிச் செல்வதாக முகமதுராக்கி சம்மதம் தெரிவித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in