தனியார்மயமாக்கலை கண்டித்து - திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

தனியார்மயமாக்கலை கண்டித்து  -  திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் நாளான நேற்று வங்கிப் பணிகளை புறக்கணித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். இந்திய ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் பாலாஜி பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கண்டித்து பேசினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 175 பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் 2500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in