Published : 16 Dec 2021 03:06 AM
Last Updated : 16 Dec 2021 03:06 AM

சேலம் 5 ரோடு பகுதியை அகலப்படுத்த வலியுறுத்தல் :

சேலம் ஐந்து ரோடு பகுதியில் இருந்து சாரதா கல்லூரி சாலைக்கு செல்லும் வளைவு பாதையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் ஐந்து ரோடு ரவுண்டானா பகுதியில் ஈரடுக்கு மேம்பாலமும், பாலத்தின் கீழே புதிய பேருந்து நிலையம், மூன்று ரோடு, ஜங்ஷன், குரங்குச்சாவடி, சாரதாகல்லூரி சாலை என ஐந்து பகுதிகளுக்கு செல்ல தனித்தனி சாலைகள் பிரிந்து செல்கின்றன. இதில், சாரதா கல்லூரி சாலைக்கு செல்லும் வளைவு பகுதி பிற சாலைகளை காட்டிலும் குறுகலாக உள்ளது. மேலும், இச்சாலையோரங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, ஐந்து ரோடு ரவுண்டானா பகுதியில் சாரதா கல்லூரி சாலைக்கு திரும்பும் வளைவுப் பகுதியை அகலப்படுத்தி போக்குவரத்து வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x