Published : 16 Dec 2021 03:06 AM
Last Updated : 16 Dec 2021 03:06 AM
புதுச்சேரியில் தேசிய இளையோர் திருவிழா நடத்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக மாநில அரசுடன் கலந்
தாலோசித்து வருகிறது. இவ்விழா தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை புதுச்சேரியில் நேற்று டெல்லி இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தின் அரசு செயலர் உஷா ஷர்மா சந்தித்து பேசினார். புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது புதுச்சேரியில் தேசிய இளையே்ார் திருவிழா-22-ம் தேதி
நடத்துவது குறித்து அவர் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இளைஞர் விவகாரங்கள் அமைச்சகம் இணைச் செயலர் நிதேஷ் குமார் மிஸ்ரா, துணைச் செயலர் பங்கஜ்குமார் சிங், புதுச்சேரி அரசு செயலர் அசோக்குமார், பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ரகவுடு ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!