Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

காரைக்குடியில் உமையாள் ராமநாதன் உடல் தகனம்: அமைச்சர் அஞ்சலி :

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அருகேயுள்ள பவநகர் ஸ்டேடியத்தில் உமையாள் ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.

காரைக்குடி: அழகப்பா கல்விக் குழும நிறுவனங்களின் நிறுவனர் அழகப்பச் செட்டியாரின் மகள் உமையாள் ராமநாதன் டிச.12-ம் தேதி சென்னையில் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அங்கிருந்து நேற்று முன்தினம் சொந்த ஊரான காரைக்குடி அருகே கண்டனூருக்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று காலை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அருகே பவநகர் ஸ்டேடியத்தில் உமையாள் ராமநாதனின் உடல் வைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, மாங்குடி எம்எல்ஏ, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், கருப்புச்சாமி மற்றும் முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பிறகு அழகப்பச் செட்டியாரின் நினைவிடம் அருகே அம்மையாரின் உடல் எரியூட்டப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x