Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

வெடிபொருள் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு :

திருச்சி மாவட்டம் வையம்பட் டியைச் சேர்ந்தவர் குமார்(45). இவர், நேற்று இருசக்கர வாக னத்தில் வெடிபொருட்களை எடுத்துக் கொண்டு, கரூர் மாவட்டம் பாலவிடுதி அருகேயுள்ள குளக்காரம்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவித மாக வெடிபொருட்கள் வெடித் துச் சிதறியதில் குமார் படுகாய மடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பாலவிடுதி போலீஸார் குமாரின் சடலத்தை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனத்தில் வெடித்த வெடிபொருள் எந்த வகையானது? வாணவேடிக் கைக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகளா? அவற்றை எங்கு வாங்கி, எங்கு கொண்டு சென் றார்? அவை திடீரென வெடிக்க காரணம் என்ன? என்பன குறித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x