Published : 16 Dec 2021 03:08 AM
Last Updated : 16 Dec 2021 03:08 AM

குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் :

குழந்தைகள் நலக்குழுவுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோல் , இளைஞர் நீதி குழுமத்துக்கு ஒரு பெண் உட்பட 2 சமூகநல உறுப்பினர்கள் 3 ஆண்டு காலத்துக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயது பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து அல்லது https://tenkasi.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து வருகிற 29-ம் தேதிக்குள் ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 32-33 A (1) ராஜராஜேஸ்வரி நகர், (மாலா மெடிக்கல் சென்டர் காம்ப்ளக்ஸ்) திருநெல்வேலி மாவட்டம் – 627 007’ என்ற முகவரிக்கு கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 0462-2551953, 2901953 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x