Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM

வெங்கடேச பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு :

வைகுண்ட ஏகாதசியையொட்டி சேவூர் அருகே மொண்டிபாளையத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு தேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள், வைகுந்தநாத பெருமாளுக்கு திருமஞ்சனம் அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து தேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல அவிநாசி, திருமுருகன்பூண்டி, கருவலூர் பெருமாள் கோயில், தாளக்கரை லஷ்மி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x