Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

ஓடும் பஸ்ஸில் 12 பவுன் திருட்டு :

மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா(22). கடந்த 13-ம் தேதி ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநகருக்கு பஸ்ஸில் சென்றார்.

திருநகர் 3-வது நிறுத்தத்தில் அவர் இறங்கியபோது, 6 பவுன் நகை வைத்திருந்த அவரது பேக் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருநகர் போலீஸார் விசாரிக்கின்றனர். சிலைமான் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் தில் லைராணி(23). கடந்த 13-ம் தேதி சிலைமானில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் சென்றபோது அவரது பை திருடுபோனது. அதில் 6 பவுன் நகை இருந்தது. இதுகுறித்து தெற்குவாசல் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.

ஜெய்ஹிந்த்புரம் அண்ணா மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஆக்னஸ்சில்வியா(54). இவரது வீட்டில், கடந்த மாதம் 3 பவுன் நகை மாயமானது. இதுகுறித்து அவர் ஜெய்ஹிந்த் புரம் போலீஸில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் வேலை பார்த்த பெண் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x