Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM

‘கரோனா பரவல் குறைந்ததால் கோயில் விழாக்களுக்கு அனுமதி’ :

திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் பி.கே.சேகர் பாபு பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

கரோனா பரவல் காரணமாக கடந்த காலங்களில் கோயில்களில் விழாக்கள் தடைபட்டிருந்தன. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதாலும், கடந்த 7 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டதாலும், இதுபோன்ற விழாக்களுக்கு தமிழக முதல்வர் அனுமதியளித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப் புக்கு பக்தர்களும், அர்ச்சகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x