கொலை வழக்கில் 10 இளைஞர்கள் கைது :

கொலை வழக்கில் 10 இளைஞர்கள் கைது :
Updated on
1 min read

திருச்சி பொன்மலை பொன்னேரி புரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் தாம்சன்ராஜ் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மாவடிகுளம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக் குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கடந்த 4 மாதங்களுக்கு முன் கொட்டப்பட்டு ஜே.ஜே.நகரைச் சேர்ந்த சின்ராசு என்பவரை பெலிக்ஸ் சகோதரர் அலெக்ஸ் உள்ளிட்டோர் கொலை செய்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் தற்போது அலெக்ஸின் சகோதரர் பெலிக்ஸை சின்ராசு வின் ஆதரவாளர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சின்ராசுவின் சகோதரர்களான ரமேஷ்(26), சக்திவேல்(21), நண்பர்களான மாத்தூர் சி.மனோஜ்குமார்(19), குண்டூர் பர்மா காலனி சுபாஷ் (19), சுப்பிரமணிய புரம் சுந்தர்நகர் நிஜி (எ) பிரகாஷ்ராஜ் (19), சங்கிலி யாண்டபுரம் வள்ளுவர் நகர் கிஷோர் (19), பொன் மலைப்பட்டி அந்தோனியார் கோயில் தெரு ஜோஷ்வா பீட்டர் (21), டார்வின் ஆன்ட்ரோ(24), பொன்மலைப் பட்டி திருநகர் ரா.மனோஜ்குமார் (21), கொட்டப்பட்டு மாரியம்மன் கோயில் தெரு சிவராம் (23) ஆகி யோரை திருவெறும்பூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in