Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

சமூக வலைதளத்தில் பழகி காதலிப்பதாக - பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் பறிப்பு :

சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி, மதுரையை சேர்ந்த இளம் பெண்ணிடம் ரூ.2.50 லட்சம், 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞரை அவனியாபுரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை அவனியாபுரம் அருகே அயன் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண். இவர், தனது மொபைல் மூலம் சமூக வலைதளப் பார்வை யாளராகவும், கருத்து பகிர் வாளராகவும் இருந்துள்ளார்.

இதன்மூலம் கடந்த ஆகஸ் டில் செர்பி ஜோசப் என்ற இளை ஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி புகைப்படம், கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் செர்பி ஜோசப் அப்பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செர்பி ஜோசப் அந்த பெண்ணிடம் தனியார் ஆப் மூலம் ரூ. 2.50 லட்சம் வரை பெற்றுள்ளார். மேலும் சமீபத்தில் கோயிலுக்கு அப்பெண்ணை வரவழைத்து 5 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கிச் சென்றுள்ளார்.

அதன்பிறகு, தனது மொபைல் போன் இணைப்பைத் துண் டித்தார். இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த அப்பெண் அவனியாபுரம் போலீஸில் புகார் செய்தார். இதன்பேரில் செர்பி ஜோசப் மீது வழக்குப்பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x