Published : 14 Dec 2021 03:10 AM
Last Updated : 14 Dec 2021 03:10 AM

விபத்தில் கன்னியாகுமரி இளைஞர் மரணம் :

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் ஆர்.சி. சர்ச் தெரு அலெக்ஸ் மகன் மஸ்கிரியான் (24). இவரும், இவரது நண்பரான கன்னியாகுமரி மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த பிரின்ஸ் (23) என்பவரும் காரில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை முக்கூடல்- பொட்டல்புதூர் சாலையில் செங்குளம் விலக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில் காரில் இருந்த மஸ்கிரியானும், பிரின்ஸும் பலத்த காயமடைந்தனர். பாப்பாக்குடி போலீஸார் அங்கு சென்று காரில் சிக்கியிருந்த 2 பேரையும் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், வழியிலேயே மஸ்கிரியான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரின்ஸ் சேர்க்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x