Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM

அரசு பேருந்து நடத்துநர் போக்ஸோவில் கைது :

அரியலூர் மாவட்டம் பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(41). இவர், அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர். இவருக்கு 3 முறை திருமணம் ஆகியுள்ள நிலையில், குழந்தை இல்லாத தால், கடலூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், நடத்துநர் ராதாகிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாயையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x