Published : 12 Dec 2021 03:10 AM
Last Updated : 12 Dec 2021 03:10 AM

வெள்ளக்கல் பாசன கால்வாயில் - நுரையாக பொங்கும் தண்ணீர் : விவசாயிகள் கவலை

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீரோடு கால்வாயில் கலந்து நுரை நுரையாக கண்மாயில் கலக்கிறது. காற்றில் நுரை பறந்து சென்று வாகன ஓட்டுநர்கள் மீது விழுவதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

மதுரை

மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண்மாய் நிரம்பியதால் சில நாட்களுக்கு முன்பு அவனியாபுரம் அருகே உள்ள ஜேபி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தது. தற்போது பெய்து வரும் கன மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழை நீரோடு பாசனக் கால்வாயில் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக கண்மாயில் கலக்கிறது.

இந்த தண்ணீர் நுரை நுரையாகப் பொங்கி தண்ணீர் தூர்நாற்றம் வீசுகிறது.

காற்று அடித்தால் நுரை காற்றில் பறந்து ரோட்டில் செல்லும் பாதசாரிகள், வாகன ஒட்டுநர்கள் மீது படுவதால் விபத்து ஏற்படும் சூழ் நிலை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x