சரக்கு வாகனம் கவிழ்ந்து 20 பேர் காயம் :

சரக்கு வாகனம் கவிழ்ந்து 20 பேர் காயம் :
Updated on
1 min read

பெத்தநாயக்கன்பாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், 20 பேர் காயமடைந்தனர்.

சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, திமுக-வினர் ஏராளமானோர் சேலம் வந்தனர்.

இந்நிலையில், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த சின்னமசமுத்திரம் என்ற இடத்தில் இருந்து, 24 பேர் சரக்கு வாகனத்தில் வந்தனர். வாகனம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த காளிசெட்டியூர் அருகே வந்தபோது, திடீரென பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில், 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக ஏத்தாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in