Published : 12 Dec 2021 03:10 AM
Last Updated : 12 Dec 2021 03:10 AM

புதுக்கோட்டையில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம் :

புதுக்கோட்டையில் அனைத்து பதிவு பெற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார்.

இதில், அனைத்து மருந்தகங்களிலும் பதிவு பெற்ற மருந்தாளுநர்களைக் கொண்டு மருந்து விநியோகம் செய்ய வேண்டும். அனைத்து மருந்தகங்களிலும் மருந் தாளுநர்கள் முழுநேரமாக பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.

வலி மருந்துகள் போதை மருந்துகளாக பயன்படுத் தப்படுவதை தடுக்க வேண்டும்.

மருந்தாளுநர்களை அரசு முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x