Published : 12 Dec 2021 03:11 AM
Last Updated : 12 Dec 2021 03:11 AM

பாளை. செல்போன் கடையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு :

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் செயல்படும் தனியார் செல்போன் கடையில் மேலாளரான செல்வம் என்பவருக்கும், அங்கு பணியாற்றும் மைதீன், பஷீர் ஆகியோருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. நேற்று விடுப்பில் இருந்த மேலாளர் செல்வம் பிற்பகல்

3 மணியளவில் கடைக்கு வந்துள்ளார். சிறிதுநேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அங்கிருந்த பணியாளர்களை வெட்டிவிட்டு தப்பினார். இதில் மைதீன், பஷீர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x