பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெறலாம் :

பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்   கல்வி உதவித்தொகை பெறலாம்  :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2021-2022ம் ஆண்டுக்கான உதவித் தொகைக்கு முதுகலை (எம்.ஏ., எம்.காம், எம்.எஸ்.ஸி, எம்.பில்., எம்.பி.ஏ., பி.எச்.டி.,) பாலிடெக்னிக் (டிப்ளமோ - மூன்றாண்டு பட்டயப்படிப்பு), தொழிற் படிப்பு ( மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும், வேளாண்மை, பொறியியல், சட்டம்) போன்ற படிப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மர பினர் மாணவ , மாணவியர் புதிதாக விண்ணப் பிக்கலாம்.

விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகம் அல்லது பிற்படுத்தப்ப ட்டோர் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி dir.bcmw@nic.in மற்றும் தொலைபேசி எண் 044-29515942 மூலம் அணுகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in