Published : 11 Dec 2021 03:12 AM
Last Updated : 11 Dec 2021 03:12 AM

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் :

திருநெல்வேலி/தென்காசி

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருநெல் வேலி வண்ணார்பேட்டையில் சிஐடியூ சார்பில் 10 நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வண்ணார்பேட்டையில் சாலை தெருமுனையில் சென்ற ஆட்டோ, இருசக்கர வாகனங்களை நிறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் மோகன், பொருளாளர் பெரு மாள், ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகன், அரசு போக்குவரத்து கழக சிஐடியூ சங்க பொதுச் செய லாளர் ஜோதி, தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலங்குளத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x